தமிழ்நாடு அரசின் பரிந்துரைகளை நிராகரிக்கும் ஆளுநர்! கண்டனம் தெரிவிக்கும் வைகோ!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரிய தலைவராக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவை நியமிக்கும் தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்த செயலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். 

முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரிய தலைவராக நியமிக்க தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்தது. ஆனால், தமிழ்நாடு அரசின் பரிந்துரையை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நிராகரித்துள்ளார்.  

இந்நிலையில் ஆளுநரின் செயலை கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்தது சர்வாதிகார முடிவு என்று கூறியுள்ளார். மாநில அரசின் பரிந்துரைகளை எல்லாம் நிராகரிக்கும் ஆளுநருக்கு கண்டனத்தை தெரிவிப்பதாக கூறியுள்ளார்.