ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆறுதல் கூறினார் வி.கே சசிகலா...

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பு காரணமாக இன்று காலை உயிரிழந்த நிலையில் திருமதி வி.கே சசிகலா பெருங்குடி மருத்துவமனைக்கு நேரில் சென்று ஓ.பி.எஸுக்கு ஆறுதல் கூறினார். 

ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆறுதல் கூறினார் வி.கே சசிகலா...

தமிழக அரசின் முன்னாள் முதல்வரும் தற்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி சென்னையில் இருக்கும் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் உடனடியாக பெருங்குடியில் உள்ள பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை 6.45 மணி அளவில் உயிரிழந்தார்.

இதனிடையே எதிர்க்கட்சி துணைத் தலைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வத்தை திருமதி வி.கே சசிகால் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்தையும் சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். இந்த சந்திப்பின் போது ஜெயா டிவியின் தலைமை அதிகாரி விவேக் உள்ளிட்ட சிலர் உடனிருந்தனர்.

முன்னதால் எதிர்க்கட்சி துணைத் தலைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உயிரிழந்த செய்தியை கேட்ட அதிமுக நிர்வாகிகள் அவருக்கு இரங்கல் தெரிவித்தனர். தொடர்ந்து ஓ.பி.எஸ் மனைவியின் உடல் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு கொண்டு செல்லவுள்ளது.

இதன் காரணமாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜெம் மருத்துவமனையில் உள்ள ஓ.பி.எஸ் மனைவியின் உடலுக்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த சந்திப்பின் போது துரை முருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.