உதகை 200 நிறைவு - பலூன் திருவிழா தொடக்கம்...!

உதகை 200 நிறைவு - பலூன் திருவிழா தொடக்கம்...!

சுற்றுலா  நகரமான உதகை உருவாகி 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நடைபெறும் பலூன் திருவிழாவை சுற்றுலாத் துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். 

உதகை உருவாகி 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு தமிழ்நாடு அரசு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. 

இதையும் படிக்க : மாநிலக் கல்விக் கொள்கை குழுவுக்கு கால நீட்டிப்பு...பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

இதன் ஒருபகுதியாக உதகை பர்ன்ஹில் பகுதியில் 10 நாட்களுக்கு நடைபெறும் பலூன் திருவிழா தொடங்கி வைக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து, வெளிநாட்டுப் பறவைகளைக் கண்டுகளிக்கும் வகையில் பறவைகளுக்கு உணவளித்து புகைப்படம் எடுத்துக் கொள்ளும் அரங்கையும் அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.