இரு வெவ்வேறு சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு..  

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே நடைபெற்ற இரு வெவ்வெறு சாலை விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

இரு வெவ்வேறு சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு..   

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே நடைபெற்ற இரு வெவ்வெறு சாலை விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

மாதவரம் அடுத்த சேலவாயல் வேதாந்த முருகப்ப நாயக்கர் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். வெல்டராக பணிபுரிந்து வரும் இவர், நேற்று பணி முடித்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்புகையில் பின்னால் வந்த லோடு வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ராஜேந்திரன் மீது லோடு வேன் மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார்.

இதேபோல், செங்குன்றத்தின் மற்றொரு சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர்கள் மீது பின்னால் வந்த பதிவு எண் தெரியாத வாகனம் மோதியதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.