ஒகேனக்கல் வனப்பகுதியில் இரண்டு யானைகள் உயிரிழப்பு...

ஒகேனக்கல் வனப்பகுதியில் இரண்டு யானைகள் உயிரிழப்பு...

தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் அருகே வெவ்வேறு இடங்களில் இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்தது.

போடூர் கிராமம் அருகே ஆண் யானை ஒன்று உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளது. அதேபோல கோடுபட்டி கிராமம் அருகே உள்ள வனப்பகுதியில் 10 வயதுள்ள பெண் யானை ஒன்று தண்ணீர் செல்லும் ஓடைகள் இருந்த சேற்றில் மாட்டிக்கொண்டு உயிரிழந்தது. இதனை அறிந்த வனத்துறையினர் ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு யானையை மீட்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.  

மேலும் யானையை மீட்ட பின்பு பிரேத பரிசோதனை செய்வதற்காக மருத்துவக் குழுவினர் தயாராக உள்ளனர். இன்று தர்மபுரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் இரண்டு காட்டு யானைகள்  உயிரிழந்திருக்கின்றன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தர்மபுரி மாவட்டத்தில் ஆறு யானைகள் உயிரிழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.