காவல்துறை சார்பில் மோர் பந்தல்...! கோடைக்கு இதமாக மக்கள் வாங்கிப் பருகினர்...!

காவல்துறை சார்பில் மோர் பந்தல்...!  கோடைக்கு இதமாக மக்கள் வாங்கிப் பருகினர்...!

பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில், சென்னை வேப்பேரியில், காவல் துறை சார்பில், நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. பொதுவாக கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்கும் வகையில், பொதுமக்களுக்கு, காவல் துறை சார்பில் நீர்  மோர் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க:... சங்கரன்கோவிலில் காவல் துறை அதிகாரியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்...!

அந்த வகையில், முதற்கட்டமாக, சென்னை வேப்பேரியில் போக்குவரத்து ஆய்வாளர் பாண்டிவேலு தலைமையில், நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.  நாள்தோறும், 50 லிட்டர் மோர்  மற்றும், 24 மணி நேரமும் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக போக்குவரத்து ஆய்வாளர் பாண்டிவேலு தெரிவித்தார்.

இதையும் படிக்க:... செங்கோட்டையில் சோதனை ரயில்...! நூறாண்டு பாரம்பரியம்...!

அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் செல்லும் பொதுமக்கள் நீர்மோரை வாங்கிப் பருகினர். ஏப்ரல் தொடங்கி மே மாதம் முழுவதும் இந்த நீர் மோர் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.