சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 19 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை...

தமிழகத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்ததை அடுத்து, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 19 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 19 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை...

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. வங்க கடலில் சமீபத்தில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக சில மாவட்டங்களில் அதி கனமழை வெளுத்து வாங்குகிறது .அதன் தொடர்ச்சியாக வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது வலுப்பெற்றுள்ளது.

இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு அதி கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை நேற்று மாலை முதல் நகர் முழுவதும் பல மழை வெளுத்து வாங்கி வருகிறது. 

இந்த நிலையில், கனமழை காரணமாக 19 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்துள்ளனர். இதேபோல் திருவண்ணாமலை, திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.