சகல பூஜைகளுடன் நடந்து முடிந்த ஸ்ரீ பொம்மி கோவிலின் கும்பாபிஷேகம்!!!

திண்டிவனம் அடுத்த ஆசூரில் கோயில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.

சகல பூஜைகளுடன் நடந்து முடிந்த ஸ்ரீ பொம்மி கோவிலின் கும்பாபிஷேகம்!!!

திண்டிவனம் அடுத்த ஆசூர் கிராமத்தில் அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பொம்மி வெள்ளை நாயகி சமேத ஸ்ரீ மதுரை வீரன் மற்றும் ஸ்ரீ அகோர வீரன் ஸ்ரீ ருத்ர மகரிஷி மற்றும் பரிவார நூதன ஆலய அஷ்டபந்தனமாக கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

இதனை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜைஸ்ரீ மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஸ்ரீ நவகிரக பீட ஹோமம் உள்ளிட்டவை நடத்தப்பட்டதுபின்பு யோக கால பூஜை, முதற்கால பூஜை, இரண்டாம் கால பூஜை ஆகியவை நடத்தப்பட்டு அஷ்டபந்தனம் சாத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கோயிலின் கலசத்திற்கு குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற்றதுஇதில் மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள், பக்தர்கள், ஆலய விழா குழுவினர் எனஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | முத்துமாரியம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம்!!!