பெண்கள் கபடிப் போட்டி... 18 அணிகள் பங்கேற்பு.. "கிடுக்கு பிடி".. விறுவிறுப்பு ஆட்டம்!!

அறந்தாங்கி அருகே நடைபெற்ற மாநில அளவிலான பெண்கள் கபடிப் போட்டியை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.

பெண்கள் கபடிப் போட்டி...  18 அணிகள் பங்கேற்பு.. "கிடுக்கு பிடி".. விறுவிறுப்பு ஆட்டம்!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ரெத்தினக்கோட்டையில், 30-ம் ஆண்டு மாநில அளவிலான பெண்கள் கபடிப் போட்டி நடைபெற்றது. இதில், சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 18 அணியினர் பங்கேற்றனர்.

லீக் அடிப்படையில் மொத்தம் 34 சுற்றுகளாக போட்டி நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில், பெண்கள் அபாரமாக விளையாடி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில், சென்னை சிட்டி போலீஸ் அணியினர் முதலிடத்தையும், சென்னை தமிழ்நாடு போலீஸ் அணியினர் இரண்டாவது பரிசையும் தட்டிச் சென்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசுகள் மற்றும் கோப்பை வழங்கப்பட்டன. இப்போட்டியினை சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டுகளித்தனர்.