திருவாரூர் : "ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு".. உளுந்து, பயிரில் பரவிய கச்சா எண்ணெய்!!

திருவாரூர் அருகே ஓஎன்ஜிசி குழாயில் இருந்து கசிந்த கச்சா எண்ணெய் விளை நிலங்களை சூழ்ந்ததால் பயிர்கள் சேதம் அடைந்தன. 

திருவாரூர் : "ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு".. உளுந்து, பயிரில் பரவிய கச்சா எண்ணெய்!!

திருவாரூர் மாவட்டம் எருக்காட்டூர் கிராமத்தில் விளை நிலத்தின் வழியாக செல்லும்  ஓஎன்ஜிசி எண்ணெய் குழாய் உடைந்து, அதிலிருந்து கச்சா எண்ணெய் வெளியேறி வருகிறது. எருக்காட்டூர் பகுதியில் உள்ள நடராஜன் என்பவருடைய விளை நிலத்தில் எண்ணெய் பரவியுள்ளது. இதில் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த உளுந்து உள்ளிட்ட பயிர் வகைகள் முற்றிலும் எண்ணெயால் சூழப்பட்டுள்ளன. 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்துறை அதிகாரிகள், வயலியில் பரவியுள்ள எண்ணெயை அகற்றும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால் கவலையில் ஆழ்த்துள்ள விவசாயிகள், உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி குழாய் உடைப்பு போன்ற நிகழ்வு அடிக்கடி அரங்கேறி வருவதால், விளை நிலங்கள் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கக் கூடுமோ என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்ப்பார்ப்பாகவும் இருந்து வருகிறது.