தமிழகத்தை விட எங்களுக்கு பாதுகாப்பான அன்பான மாநிலம் எதுவுமில்லை - வட மாநில தொழிலாளர்
வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக வதந்தி:
வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக வதந்தி பரவிய நிலையில் வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி செல்வதாக தகவல்கள் பரவுவதால் சென்னை மௌண்ட் ரோட்டில் உள்ள உட்லாண்ட்ஸ் விடுதியில்( கேசினோ திரையரங்கம் அருகில்) சிந்தாதிரிப்பேட்டை காவல் ஆய்வாளர் ராஜாராம் தலைமையில் வடமாநில தொழிலாலர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும் படிக்க | சட்டசபையில் யார் யாருக்கு எங்க இடம் ஒதுக்க வேண்டும் என எனக்கு தெரியும் - அப்பாவு
சொந்த ஊர் போலவே வாழ்கிறோம்
எங்களின் சொந்த மாநிலமான பீகார் உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் வாழ்வது போன்றே நாங்கள் சென்னையில் மற்றும் தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றோம். மற்ற இடங்களில் நிகழும் தாக்குதல்கள் போலியான தாக்குதல்கள் மற்றும் அதனை வைத்து சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்ப வேண்டாம் என்றும் நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம் என்று தெரிவித்தனர்.