பிளஸ் 2 பொதுத்தேர்வு: தமிழைப் பயிற்று மொழியாக கொண்ட மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் இல்லை.!!

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம் தேர்வுக்கட்டணத்தை வசூலித்து அதை வரும் 20-ம் தேதிக்குள் ஆன்லைனில் செலுத்திட வேண்டும் என உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு: தமிழைப் பயிற்று மொழியாக கொண்ட மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் இல்லை.!!

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம் தேர்வுக்கட்டணத்தை வசூலித்து அதை வரும் 20-ம் தேதிக்குள் ஆன்லைனில் செலுத்திட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா  இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். தமிழை பயிற்று மொழியாகக் கொண்டு தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்புடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கண் பார்வையற்றவர்கள்,காது கேளாதவர்கள், வாய் பேச முடியாதவர்களுக்கும் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு மற்றும்  உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் MBC, SC, ST, SCA மாணவர்களுக்கும் தேர்வுக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.