பிரபல ஆவின் உணவகத்தில் விற்பனை செய்த உணவில் கிடந்த புழு!! அதிர்ச்சியடைந்த மக்கள்

பிரபல ஆவின் உணவகத்தில் விற்பனை செய்த உணவில் கிடந்த புழு!! அதிர்ச்சியடைந்த மக்கள்

ஈரோடு மாவட்டம் சித்தோடு ஆவின் உணவகத்தில் விற்பனை செய்த காலாவதியான உணவில் புழு இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சித்தோடு தலைமை ஆவின் பாலகம் முன்பு ஆவின் பூத் செயல்பட்டு வருகிறது. இங்கு கார்த்திக் என்பவர் தயிர் சாப்பாடு வாங்கிய போது அதில் சிறிய புழு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு மீதம் இருந்த உணவை கீழே கொட்டினர். காலாவதியான உணவை விற்பனை செய்த சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.