முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்த கவிஞர் வைரமுத்து..!!

வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக ஒரு தலைமை வங்கி தமிழ்நாட்டில் உருவாக்கப்பட வேண்டும் என முதலமைச்சருக்கு கவிஞர் வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்த கவிஞர் வைரமுத்து..!!

வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக ஒரு தலைமை வங்கி தமிழ்நாட்டில் உருவாக்கப்பட வேண்டும் என முதலமைச்சருக்கு கவிஞர் வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில்  அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில், அயலகத் தமிழர் நாள்  விழா கொண்டாடப்பட்டது.

இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த வைரமுத்து, உலக தமிழர்களை இணையவழியில் இணைத்து ஒரு அயலக மாநாட்டை நடத்தியதாக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். உலக தமிழர்களுக்கென ஒரு தலைமை வங்கி தமிழகத்தில் உருவாக்கப்பட வேண்டும் என கோரினார்.