என் குடும்பத்தை தத்தெடுத்துக் கொள்ளுங்கள்... ரஜினியிடம் கோரிக்கை வைத்து சைக்கிளில் சுற்றும் நபர்...

தஞ்சை அருகே வாழ்வில் முன்னேற வாய்ப்பு கொடுங்க ரஜினி சார் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகையுடன் நபர் ஒருவர் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

என் குடும்பத்தை தத்தெடுத்துக் கொள்ளுங்கள்... ரஜினியிடம் கோரிக்கை வைத்து சைக்கிளில் சுற்றும் நபர்...

திருவிடைமருதூர் தாலுகா வேப்பத்தூர் அம்மன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் நீலமேகம். இவர்  மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் படங்களுடன் வாழ்க்கையில் முன்னேற ஒரு வாய்ப்பு கொடுங்கள் சார்  என  எழுதிய வாசகத்துடன் சைக்கிளில் சுற்றி வருகிறார்.

அதில் கொரோனா தொற்று காரணமாக நடிகர் ரஜினியை நேரில் சந்திக்க முடியாத நிலையில் இதனை அவரது கவனத்திற்கு கொண்டு செல்ல கும்பகோணத்திலிருந்து இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அந்த பதாகையில் எதுவும் முடியாத பட்சத்திற்கு தான் உங்களிடம் உதவி கேட்டு வருகிறேன் என்றும் மேலும் அடுக்கடுக்கான பல கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்.
மேலும் வறுமையில் வாடும் தன் குடும்பத்தை தத்தெடுத்து தங்களுக்காக ஒரு படம் நடித்து அதில் தாங்கள் பெறும் சம்பளத்தை ஒரு வருடம் வங்கியில் டெபாசிட் செய்து அதில் கிடைக்கும் வட்டித் தொகையில் பாதியை கொண்டு ஒரு ஆட்டுப் பண்ணை அமைத்து தர முடியுமா?  என குறிப்பிட்டுள்ளார்.

அந்த வருமானத்தில் ஆட்டுப்பண்ணைக்கான தங்கள் கடனையும் சிறுக, சிறுக அடைத்து வாழ்க்கையில் முன்னேறி ஒரு நல்ல நிலைக்கு வந்து விடுவோம் என உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். உங்களுக்கு எப்படி டைரக்டர் கே. பாலச்சந்தர் வாய்ப்பு கொடுத்து வாழ்க்கையில் முன்னேற உதவினாரோ அதுபோல் எங்கள் குடும்பத்திற்கு வாழ்க்கையில் முன்னேற வாய்ப்பு கொடுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார்.