சாலைகளில் கிடந்த பாம்பு முட்டைகள்..! வனச்சரகரின் நெகிழ்ச்சி செயல்..!

பாம்பு முட்டைகளை குஞ்சு பொறிக்க வைத்து வனப்பகுதியில் விட்ட வனச்சரகர்..!

சாலைகளில் கிடந்த பாம்பு முட்டைகள்..! வனச்சரகரின் நெகிழ்ச்சி செயல்..!

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பர். அப்படி பாம்பை கண்டாலே அடித்து கொன்று விடும் மக்களுக்கு மத்தியில் சத்தியமங்கலத்தை சேர்ந்த வனச்சரகரின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான விலங்குள் உள்ளன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சத்தியமங்கலம் அத்தாணி செல்லும் சாலையில் வனச்சரகர் பெர்னார்ட் என்பவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சாலையோரம் பாம்பு முட்டைகள் கிடந்துள்ளது. அவற்றை எடுத்து சென்ற வனச்சரகர் பெர்னார்ட் முட்டைகளை பாதுகாப்பாக வைத்து, குஞ்சுகள் பொறிந்தவுடன், பாம்பு குட்டிகளை பத்திரமாக வனப்பகுதியில் விட்டார். இந்தக் காட்சியை சமூக வலைதளத்தில் பார்த்த பலரும் வனச்சரகரை பாராட்டி வருகின்றனர்.