குழந்தையை விஷம் கொடுத்து கொலை செய்த தந்தை.. விடுதலை குறித்து முன்னாள் நீதிபதி உருக்கமான பேச்சு!

குழந்தையை விஷம் கொடுத்து கொலை செய்த தந்தை..  விடுதலை குறித்து முன்னாள் நீதிபதி உருக்கமான பேச்சு!

சென்னையில் 8 ஆண்டுகளுக்கு முன்பு  குழந்தையை விஷம் கொடுத்து கொலை செய்த தந்தையை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது குறித்து முன்னாள் நீதிபதி நாகமுத்து உருக்கமாக பேசியுள்ளார்.

தஞ்சையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி நாகமுத்து கலந்துகொண்டார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர், குழந்தையை விஷம் கொடுத்து கொலை செய்த தந்தை குறித்து பேசினார்.

அதில், ஏழை குடும்பத்தில் பிறந்து காதல் திருமணம் செய்து விபத்தில் மனைவியை பறிகொடுத்து குழந்தையையும் கொன்று தற்கொலைக்கு முயன்ற அந்த தந்தை மனநோயால் பாதிக்கப்பட்டு இந்த செயலை செய்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறினார். இதன் அடிப்படையில் அவரை விடுதலை செய்ததாக முன்னள் நீதிபதி தெரிவித்துள்ளார்.