கான்கிரீட் கலவையை தம்பதி மீது கொட்டிய காண்டிராக்டர்..! காரணம் என்ன?

கான்கிரீட் கலவையை  தம்பதி மீது கொட்டிய காண்டிராக்டர்..! காரணம் என்ன?

கரூரில் சாக்கடை கட்டுமானப் பணிகள் நடைபெற்று கொண்டிருந்த போது கோமதி என்பவரின் வீட்டின் பக்கவாட்டுச் சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது.


கரூரில் கழிவு நீர் வடிகால் கால்வாய் குழியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட கணவன், மனைவி மீது ஒப்பந்ததாரர் கான்கிரீட் கலவையை கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க|அட இப்படியுமா நடக்கும்!!!அடித்து விளையாடியதில் சுயநினைவை இழந்த மாணவர்

கரூர் மாநகராட்சி ஜெஜெ நகர் குடியிருப்புப் பகுதியில் பாதாள  சாக்கடை கட்டுமானப் பணிகள் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. அந்த தெருவில் கோமதி என்பவரின் வீட்டை ஒட்டி சாக்கடை கட்ட பள்ளம் தோண்டிய போது அந்த வீட்டின் பக்கவாட்டுச் சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதனை கான்கிரீட் கலவை வைத்து சரிசெய்து தருமாறு கேட்டுள்ளனர்.

மேலும் படிக்க | 40 ஆண்டு போராட்டம்..! தடுப்பணைக்கு பூமி பூஜை..! விவசாயிகள் வரவேற்பு...

அதற்கு அந்த ஒப்பந்ததாரர் 43 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு மாமன்ற உறுப்பினர் பூபதி மற்றும் மாநகராட்சி பொறியாளர் ரவி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்ததாரரை அந்த வீடு மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் விரைந்து பணிகளை முடிக்க உத்தரவிட்டதை அடுத்து பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.