தந்தையை எதிர்க்க முடியாமல் என்னை தாக்குகின்றனர்- கார்த்தி சிதம்பரம் பேட்டி!!

தந்தையை எதிர்க்க முடியாமல் என்னை தாக்குகின்றனர்- கார்த்தி சிதம்பரம் பேட்டி!!

தனது தந்தை ப.சிதம்பரத்தின் வாதத்தை எதிர்கொள்ள முடியாமல் சிலர் தன்னை தாக்குவதாக குற்றஞ்சாட்டியுள்ள எம்.பி கார்த்தி சிதம்பரம், விசாரணையை சிபிஐ நேரலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை குறிப்பிட்டார். மேலும் தனக்கு சொந்தமான இடங்களில் இதுவரை 6 முறை ரெய்டு நடத்தப்பட்டுள்ளதாகவும், புலன் விசாரணை என்ற பெயரில் மன உலைச்சல் தரும் முயற்சி எனவும் சாடியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து கபில் சிபில் வெளியேறியது வருத்தம் தான் என்றாலும், அவர் சுயேட்சையாக மட்டுமே தற்போது வேட்புமனு தாக்கல் செய்துள்ளாதாகவும் கார்த்தி தெரிவித்துள்ளார்.