தங்கையின் கள்ளக்காதலனை கொடூரமாக கொன்ற அண்ணன்...!

திருமணமான தங்கையின் கள்ள காதலனை,அண்ணனுன் அவரது நண்பர்களும் கொடூரமாக அடித்து பலமுறை கத்தியில் குத்தும் சம்பவம் கிழக்கு டெல்லியில் நிகழ்ந்துள்ளது. 

தங்கையின் கள்ளக்காதலனை கொடூரமாக கொன்ற அண்ணன்...!

டெல்லியில் உள்ள சீமாபூரியில் நேற்று மாலை 5 மணி அளவில் கொலை நிகழ்ந்துள்ளதாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கொலை குறித்து விசாரணை நடத்த தொடங்கினார்.

அதில் சம்பவம் நடக்கும் போது மாடியில் இருந்து ஒருவர் பதிவு செய்த காட்சிகளில்  24-வயது இளைஞர் ஷாருக் என்பவரை 3 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கி இறுதியில் கத்தியால் நிதானமாக பலமுறை குத்தும் வீடியோ காவல்துறைக்கு கிடைத்துள்ளது. இதனை ஆதாரமாக வைத்து கொலையாளிகளில் 2 பேரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. அவர்களை போலீசார் விசாரித்து போது இது கள்ள காதல் கொலை என தெரியவந்துள்ளது. 

அதாவது, குற்றவாளி இருவரில் ஒருவரின் தங்கை ( திருமணமான பெண் )  கொலை செய்யப்பட்ட  இளைஞருடன் கள்ள தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் அண்ணன் கள்ள காதலனை கொலை செய்ய திட்டமிட்டு நண்பர்களுடன் சேர்ந்து இரும்பு நாற்காலிகள் மூலம் கொடூரமாக தாக்குவதும், பின்னர் இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து 10-க்கும் மேற்பட்ட முறை தொடர்ச்சியாக குத்தி உள்ளார்.

இதில்  படுகாயம் அடைந்த இளைஞரை அக்கம் பக்கத்தினர், மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவரை பரிசோதித்ததில் ஹாருக் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இது தொடர்பாக கிழக்கு டெல்லி காவல் ஆணையர் கூறும் போது, ஷாருக் என்பவர் பல்வேறு வழக்குகள் உள்ள குற்றவாளி; மேலும் அவரை கொலை செய்தவர்கள் ஜாபர், ஜூபார் மற்றும் ஆதித்யா என அடையாளம் காணப்பட்டு அதில் ஆதித்யா மற்றும் ஜூபார் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.