திமுக அரசின் எதேச்சதிகாரப் போக்கு கண்டனத்திற்குரியது - சீமான்

அறவழியில் போராடிய மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார்.

திமுக அரசின் எதேச்சதிகாரப் போக்கு கண்டனத்திற்குரியது - சீமான்

கல்லூரித் தேர்வுகள் நேரடி முறையில் நடத்தப்படும் என்ற தமிழக அரசின் முன் யோசனையற்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு கிளம்பியது. இணைய வழியிலேயே தேர்வுகளை நடத்த வலியுறுத்தி மதுரையில் அறவழியில் போராடிய மாணவர்கள் 710 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆளும் திமுக அரசின் எதேச்சதிகாரப் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது என  நாம் தமிழர் கட்சி  ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து தனது டுவிட்டர் வலை பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நேரடி தேர்வு முறைக்கு எதிராக அறவழியில் போராடிய மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப்பெற்று, இணையவழியிலேயே தேர்வுகளை நடத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.