தமிழ்நாட்டை திறந்தவெளி குடிப்பகமாக்குவதா? - அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!

தமிழ்நாட்டை திறந்தவெளி குடிப்பகமாக்குவதா? - அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!

திருமண அரங்கம் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மது வழங்க அனுமதித்தால் மக்களைத் திரட்டி பல கட்ட போராட்டங்களை பாமக முன்னெடுக்கும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திருமண அரங்கம் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மது வழங்குவதற்கு அனுமதி வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசிதழை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ள அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டை திறந்தவெளி குடிப்பகமாக்குவதா? எனவும், இந்த மோசமான முடிவால் சமூகம், பண்பாடு சீரழிந்து விடும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : வெறிச்சோடிய திருச்சி மாநாடு...ஓபிஎஸ்-க்கு திருப்புமுனையாக அமையுமா?

மேலும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை குறித்து ஒற்றை வரியில் குறிப்பிட வேண்டுமென்றால், எங்கும் மது வெள்ளம்...எப்போதும் மது வெள்ளம்...என்றுதான் கூற வேண்டுமென விமர்சித்துள்ளார். இந்த மது அனுமதி குறித்த அரசாணையை திரும்ப பெற வேண்டுமென அரசிற்கு வலியுறுத்தியுள்ளார்.