”அந்தர் பல்ட்டி அடிக்கும் அரசு தான் திமுக” ஜெயக்குமார் விமர்சனம்!

”அந்தர் பல்ட்டி அடிக்கும் அரசு தான்  திமுக” ஜெயக்குமார் விமர்சனம்!

இந்தியாவில் இதுவரை வரை இல்லாத அளவிற்கு அந்தர் பல்ட்டி அடிக்கும் அரசாக திமுக உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா் விமா்சித்துள்ளாா்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், அதிமுக காலத்தில் செய்த சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது தொடர்பாகவும், புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் உறுப்பினர் அட்டையை புதுப்பித்தல் பணிகளை விரைவாக மேற்கொண்டு 2 கோடி தொண்டர்களை இணைக்கும் பணிகளை மாவட்ட செயலாளர்கள் தீவிரப்படுத்த வேண்டும் எனவும், மதுரையில் நடைபெற உள்ள பொது கூட்டம் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மிக சிறப்பாக நடத்துவது தொடர்பாகவும் பேசப்பட்டதாக தெரிவித்தார். 

இதையும் படிக்க : கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் இவர்தான்...அதிகாரப்பூர்வமாக அறிவித்தது காங்கிரஸ் தலைமை...!

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் தேனாறு, பாலாறு ஓடுகிறது என இந்த அரசு கூறி வந்த நிலையில், சாராய ஆறு மட்டுமே  ஓடுகிறது என்பது தற்போது தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டார். மேலும், தமிழ்நாட்டில் இன்னும் 15 நாட்களில் மீண்டும் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறும் அதனை தடுப்பதற்கான தைரியமும், திறனும் மு.க.ஸ்டாலினிடம் இல்லை  என தொிவித்தாா்.

இதனைத்தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு அந்தர் பல்ட்டி அடிக்கும் அரசாக திமுக உள்ளதாகவும் விமா்சித்தாா்.