கோயில் பூசாரிகளை தரக்குறைவாக பேசிய திமுக நிர்வாகி...இணையத்தில் வைரலாகும் வீடியோ!

கோயில் பூசாரிகளை தரக்குறைவாக பேசிய திமுக நிர்வாகி...இணையத்தில் வைரலாகும் வீடியோ!

சென்னை அருகே கோயில் பூசாரிகளை திமுக நிர்வாகி ஒருவர் தகாத வார்த்தைகளால் பேசும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

சென்னை, பெரம்பூர் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட 45 வது வார்டு பகுதியில் மாரிமுத்து என்பவர் திமுக கட்சியில் வட்ட செயலாளராக உள்ளார். இவர் இருக்கும் வியாசர்பாடி பகுதியில் உள்ள பீலிகான் முனீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு இன்னும் சில தினங்களில் திருவிழா துவங்கப்பட உள்ளது. 

இதையும் படிக்க : பாஜக கோரிக்கை... மனுவை திரும்ப பெற்ற அதிமுக வேட்பாளர்...!

இந்நிலையில், கடந்தாண்டு நடைபெற்ற திருவிழாவின் போது பணம் கையாடல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திமுக நிர்வாகி மாரிமுத்துவிடம் கோயில் பூசாரிகள் கேள்வி எழுப்பிய நிலையில், ஆத்திரமடைந்த அவர் தகாத வார்த்தைகளால் கடுமையாக பேசியுள்ளார். இதனை வீடியோ எடுத்த ஒரு பூசாரி காணொளியை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். 

தற்போது இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பூசாரிகளை தகாத வார்த்தைகளால் வசைப்பாடிய திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.