தமிழகத்திற்கு 12-ம் தேதிக்குள் 15.86 லட்சம் தடுப்பூசி... சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்...

அடுத்த 2 நாட்களுக்குள் 15 லட்சத்து 87 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகளை தருவதற்கு, மத்திய அரசு உறுதி அளித்துள்ளதாக, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தமிழகத்திற்கு 12-ம் தேதிக்குள் 15.86 லட்சம் தடுப்பூசி... சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்...
மத்திய சுகாதாரத்துறை மற்றும் மருத்துவ கவுன்சில் உயர் அதிகாரிகளை, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் நேற்று டெல்லியில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் நிலவும் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை குறித்து மத்திய அரசிடம் எடுத்துரைத்ததாக கூறியுள்ளார்.
 
எனவே, தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்க வலியுறுத்தியதாக குறிப்பிட்டுள்ள ராதாகிருஷ்ணன், 11 மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதி பெறுவது குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தார். மேலும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை விரைவுபடுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், கொரோனா 3-வது அலைக்கு எப்படி தயாராக வேண்டும்? என்பது குறித்து மத்திய அரசு அதிகாரிகள் விளக்கியதாக தெரிவித்தார்.