தமிழக அரசு தன்னிட்சியாக செயல்படுவது மிகவும் கண்டனத்திற்குரியது - புரட்சி பாரதம் கட்சி....
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜனுக்கு சிறந்த சமூக சேவைக்கான விருதினை வழங்கி கௌரவித்தது ரோட்டரி கிளப்
ஒரு தொண்டு நிறுவனம் என்றால் அது சமூக சேவைக்கான நிறுவனமாக இருக்க வேண்டும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர வேண்டும் என சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி பாத்திரிகையாளர்களை சந்தித்த போது...
தமிழக அரசின் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் 100 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகின்ற 1138 ஆதிதிராவிட நலப் பள்ளிகளை பள்ளி கல்வித்துறையின் கீழ் இணைந்து செயல்படுத்த போவதாக திமுக அரசு அறிவித்துள்ளது. இதற்கு அதிமுக மற்றும் புரட்சி பாரதம் தவிர ஆளுங்கட்சியின் அனைவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மேலும் ஆதிதிராவிடர் பள்ளிகளை பள்ளி கல்வித்துறை உடன் இணைப்பது குறித்து ஆதிதிராவிடர் சமூக மக்களிடமோ கல்வியாளர்களிடமோ ஆசிரியர்களிடமோ இது குறித்து எந்த ஒரு கருத்து கேட்பும் நடத்தாமல் தமிழக அரசு தன்னிட்சியாக இந்த முடிவை எடுத்துள்ளது. இது மிகவும் கண்டனத்திற்குரியது. இதனால்
பட்டியிலின மக்கள் வாழ்க்கையும் மாணவர்களின் கல்வியும் அதிகமாக பாதிக்கப்படும் என்றும் அதேபோல் ஆதிதிராவிட நலப் பள்ளியை பள்ளி கல்வித்துறை உடன் இணைக்கப்பட்டால் தமிழகத்தில் ஜாதி வன்கொடுமை தலைவிரித்தாடும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு ஆரம்ப கல்வியை கேள்விக்குறியாக பாதிப்பு உண்டாகும் என்றும் கூறினார்.
மேலும் ஆதிதிராவிட பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையுடன் இணைத்தால் ஆசிரியர்கள் நியமிக்கும் பணிகள் குறைந்துவிடும் இதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிப்படையும் எனவே இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் பட்டியலின மக்களின் கல்வியை அரசு உன்னிப்பாக கவனித்து பாதுகாக்க வேண்டும் என்பது எங்களுடைய மிகப்பெரிய கோரிக்கை என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது என்ற கூறுகிறார்கள் ஆனால் தமிழகத்தில் தொடர்ந்து சாதிய படுகொலைகள் ஆணவ படுகொலைகள் அதிகமாக நடைபெற்ற வருகிறது. அதேபோல் தமிழகத்தில் தீண்டாமை கொடுமையும் திராவிட மாடல் ஆட்சியில் கேட்பார் இல்லாதது போல் அதிகமான சட்ட விரோதங்கள் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது என்பது வேதனை அளிக்கிறது.
திமுக ஆட்சியில் பட்டியல் இன மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் திராவிட மாடல் அரசு திராவிடர்களுக்கு மட்டும்தானா; ஆதிதிராவிடர்களுக்கு அரசு இல்லை என்ற சூழ்நிலை உள்ளது .எனவே தமிழக அரசு இந்த சட்டத்தை பரிசீலனை செய்து உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும் படிக்க | சினிமாவில் பெண் கதாபாத்திரம் வடிவமைப்பு குறித்து நடிகை சம்யுக்தா கேள்வி!
தொடர்ந்து கர்நாடகாவில் தேர்தல் பரப்புரை போது தமிழ்தாய் வாழ்த்து அவமதிக்க பட்டுள்ளது குறித்து என்ற கேள்விக்கு ? அண்ணாமலைக்கு தமிழர்கள் மீது பற்று இருந்தால் அதனை கண்டனத்தை தெரிவித்து இருக்க வேண்டும் ஆனால் அவர் எதுவும் செய்யவில்லை இது கண்டனத்திற்குரிய செயல்..
மேலும் கலைஞர் பேனா நினைவு சின்னத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது குறித்த கேள்விக்கு?
இங்கு சாப்பிடுவதற்கு சோறே இல்லை என்று நாங்கள் போராடுகிறோம் 80 கோடி ரூபாய் செலவில் பேனா என்பது தேவையற்றது.
8 கோடியில் கூட பேனா சின்னம் வைக்கலாம் என்றும் மீதி உள்ள 80 கோடியை தர மற்ற பள்ளிகளை தரம் உயர்த்தி அந்த பள்ளி மாணவர்களுக்கு கலைஞர் படம் பொருந்திய பேனாவை அவர்களுக்கு வழங்கினால் அது உதவியாக இருக்கும் என்றார் .அதே சமயத்தில் கடலில் பேனா வைத்தால் சீமான் பேனாவை உடைப்பேன் என்று கூறுகிறார் அது எந்த விதத்தில் நியாயம் என்றும் எங்களுக்கு பல பிரச்சனைகள் உள்ளன போராட்டத்திற்கு ஆனால் இதற்காக நாங்கள் போராட மாட்டோம் என்றும் கூறினா