தமிழகத்தில் 30 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் :  17 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!!

தமிழகத்தில் 30 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்துள்ளது தமிழக அரசு.

தமிழகத்தில் 30 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் :  17 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!!

தமிழகத்தில் 30 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சமூக நீதி மற்றும் மனித உரிமை ஐஜியாக செந்தாமரைக் கண்ணன், நெல்லை சரக டிஐஜியாக பிரவேஷ்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் சரக டிஐஜியாக பிரவீன்குமார் அபிநவ், தஞ்சை சரக டிஐஜியாக கயல்விழி மற்றும் தமிழக காவல்துறை குற்றப்பிரிவு ஐ.ஜியாக காமினி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர், இதேபோல்,   சென்னை போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் ஆணையராக கபில்குமார், அமலாக்கப் பிரிவு ஐஜியாக விஜயகுமாரி, லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜியாக லலிதா லட்சுமியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ரம்யா பாரதி டி.ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்று, சென்னை வடக்கு மண்டல இணை ஆணையராகவும், பொன்னி டிஐஜியாக பதவி உயர்வு பெற்று, மதுரை சரக காவல்துறை டிஐஜியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.