தொடரும் தடையால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!!!

கும்பக்கரை அருவியில்   நீர்வரத்து குறைந்து சீராக்காத நிலையில் 12வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்வதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தொடரும் தடையால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!!!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின்  நீர்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல், வட்டக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி பகுதிகளில் கடந்த மாத இறுதியில் கனமழையாக இருக்கிறது.

தொடர்ந்து ஒஎய்தபெய்த கனமழையின் காரணமாக  கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து  அதிகரித்து  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 31ம் தேதி முதல் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிப்பதாக வனத்துறை அறிவித்தனர்.

இந்நிலையில் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் நீர் வரத்து சீராகாத நிலையில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி இன்று 12வது நாளாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்வதாக வனத்துறை அறிவித்துள்ளனர். இதனால் விடுமுறை தினங்களில் கும்பக்கரை அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

மேலும் படிக்க | குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரிப்பு....! 4 வது நாளாக தொடரும் தடை...!