ஆன்லைன் சூதாட்டத்தால் அதிகரிக்கும் தற்கொலைகள்...தமிழக அரசுக்கு ஆர்டர் போட்ட அன்புமணி ராமதாஸ்!
திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இயற்றப்படும் என்று தமிழக அரசு அறிவித்த போதிலும் அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்தால் தொடர்ந்து இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. மக்கள் பொழுதுபோக்கிற்காக விளையாட தொடங்கிய ஆன்லைன் விளையாட்டுகள் தற்போது அவர்களுக்கு உயிர் கொல்லியாக மாறிவிட்டது.
தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியில் இயற்றப்பட்ட சூதாட்ட தடை சட்டத்திற்க்கு சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்த நிலையில், அதன்பிறகு தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுகளால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது.
இதுகுறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ,புதுவை மாநிலம் குமராப்பாளையத்தை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் அமர்நாத் ஆன்லைன் ரம்மியில் ரூ.30 லட்சத்தை இழந்ததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை நம்பியிருந்த 3 மாதம் கருவுற்ற மனைவி ஆதரவற்றவராகியிருக்கிறார்.
திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இயற்றப்படும் என்று தமிழக அரசு அறிவித்த போதிலும் அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீட்டு மனு விசாரணை வரவில்லை. அது வரைக்கும் தற்கொலைகள் தொடருவதை அனுமதிக்க முடியாது.
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளைத் தடுக்க புதிய திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை தமிழக அரசு வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும். புதுவை அரசும் அம்மாநிலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இயற்றப்படும் என்று தமிழக அரசு அறிவித்த போதிலும் அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீட்டு மனு விசாரணை வரவில்லை. அது வரைக்கும் தற்கொலைகள் தொடருவதை அனுமதிக்க முடியாது!(4/5)
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) December 27, 2021