மத்திய அமைச்சர் மன்சுக்குடன் மா.சுப்பிரமணியின் சந்திப்பு...
தமிழகத்திற்கு 2 கோடி கூடுதல் தடுப்பூசி வேண்டுதல் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை மத்திய அமைச்சரிடம் வழங்கி உள்ளதாக தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தமிழகத்திற்கு 2 கோடி கூடுதல் தடுப்பூசி வேண்டுதல் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை மத்திய அமைச்சரிடம் வழங்கி உள்ளதாக தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மண்டாவியாவை டெல்லியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சந்தித்து பேசினார். சுமார் 20 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பின் போது சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் டெல்லி சிறப்பு பிரதிநிதி விஜயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்கள சந்தித்த மா.சுப்பிரமணியின், தமிழகத்திற்கு கூடுதலாக 2 கோடி கூடுதல் தடுப்பூசி ஒதுக்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைததுள்ளதாக தெரிவித்தார். மேலும் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் , 11 மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை துவங்குவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை மத்திய அமைச்சரிடம் வழங்கி உள்ளதாக மா.சுப்பிரமணியன் கூறினார்.