சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதன் சரமாரி வெட்டிக் கொலை வழக்கு.. 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது

திருச்சி மாவட்டம், நவல்பட்டு சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை செய்யப்பட்ட வழக்கில், 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதன் சரமாரி வெட்டிக் கொலை வழக்கு.. 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது

திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் பூமிநாதன்.

இவர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இருசக்கர வாகனங்களில் ஆடுகளுடன் சிலர் அதிவேகமாக செல்வதை கண்டு துரத்திச் சென்றுள்ளார். அப்போது திருட்டு கும்பல், எஸ்.எஸ்.ஐ. பூமிநாதனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்த பூமிநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், சிறப்பு எஸ்.ஐ. கொலை வழக்கு தொடர்பாக, இன்று அதிகாலை, 2 சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேர் பிடிபட்டனர்.

கொலையாளிகள் கல்லணையை அடுத்த தோகூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் என்றும், ஆடுகளை திருடும் தொழிலை பல வருடகாலமாக செய்து வருவதும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட கொலையாளிகள் தற்போது திருச்சிக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.