தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 4 பேர் உயிரிழப்பு...அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 4 பேர் உயிரிழப்பு...அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்,

தமிழகத்தில் இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு  4 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், 495 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

டெங்குவால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவமனைகளில் தனியாக வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர்,

டெங்கு பரவாமல் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். தமிழகத்தில் இதுவரை புதிய வகை A. Y.4.2 கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை என்றும்  தெரிவித்தார்.