லேசாக சிந்திய பாலால், ஒரு உயிர் போன சோகம்.. கோவையில் பரிதாபம்!!

கோவை மாவட்டம் சூலூர் அருகே இருதரப்பினர் மோதிக்கொண்ட நிகழ்வில் ஒருவர் உயிரிழந்ததால் அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். 

லேசாக சிந்திய பாலால், ஒரு உயிர் போன சோகம்.. கோவையில் பரிதாபம்!!

போகம்பட்டி அடுத்த பொன்னாங்காணி பகுதியை சேர்ந்த கேசவன் என்பவர் கடந்த 7-ம் தேதி தனது வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது, அதே பகுதியை சேர்ந்த மயில்சாமி என்பவரின் பால் வாகனத்தில் உரசியதால் பால் கீழே கொட்டியது. இது தொடர்பாக இரு குடும்பத்தினரும் சண்டையிட்டுக்கொண்டனர். இதைப்பார்த்த கேசவன், மயில்சாமி ஆகியோர் தர்ப்பினரும் மோதிக்கொண்டனர். 

இதில் படுகாயமடைந்த கேசவனும், உறவினர் ராமு ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து கேசவனின் மனைவி போலீசில் புகார் அளித்தார். இதுதொடர்பாக 7 பேரை கைது செய்த போலீசார் மேலும் தலைமறைவாகவுள்ள 7 பேரை தேடி வருகின்றனர். 

இதற்கிடையே சிகிச்சை பலனின்றி கேசவன் உயிரிழந்ததால் அப்பகுதியில் மோதல் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதனை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.