தமிழக மக்களுக்காக சிறையில் மாதக்கணக்கில் விரதம் இருந்தேன் : அதிமுக தொண்டரிடம் சசிகலா பேச்சு...

தமிழக மக்களுக்காக சிறையில் மாதக்கணக்கில் விரதம் இருந்தேன் என அதிமுக தொண்டரிடம் சசிகலா பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.

தமிழக மக்களுக்காக சிறையில் மாதக்கணக்கில் விரதம் இருந்தேன் : அதிமுக தொண்டரிடம் சசிகலா பேச்சு...

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி என அறியப்படும் சசிகலா அதிமுகவினருடன் பேசும் ஆடியோக்கள் சமீபகாலமாக வெளியாகி வருகிறது. அ.தி.மு.க எம்.எல்.ஏ கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் போட்ட பின்னர் இந்த ஆடியோ விவகாரம் ஓய்ந்ததாக இல்லை. இந்நிலையில் நேற்று தேனியை சேர்ந்த கண்ணன் என்ற தொண்டரிம் சசிகலா தொலைபேசி வாயிலாக பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், கட்சி இப்படி வீணாகிட்டு இருக்குறதை இனியும் என்னால் பாத்துக்கிட்டு சும்மா இருக்கமுடியாது. கட்சி ரொம்ப மோசமான நிலைமைக்கு போயிட்டு இருக்கு அதை சரி பண்ணனும். நான் இருக்கும் வரை அதை செய்வேன். தேர்தல்ல அவங்க சொன்னபடி ஜெயிப்பாங்கன்னு தான் ஒதுங்கினேன். அவங்க ஜெயித்து இருந்தா தமிழகத்துல 3-வது முறையா அம்மா ஆட்சி வந்திருக்கும். என்கூட பேசுற தொண்டர்களை கட்சிய விட்டு நீக்கிட்டு இருக்காங்க

நான் பெங்களூரு சிறையில் இருந்தாலும் 4 வருஷமா என் உடல்தான் அங்கே இருந்ததே தவிர என் உயிர் தமிழக மக்களை சுற்றியே இருந்துச்சு. நான் சிறையில் இருந்தாகூட, தமிழக மக்கள் கொரோனாவால பாதிக்கப்பட கூடாதேனு நான் செய்யாத பூஜை கிடையாது. மாதக்கணக்கில் விரதமும் இருந்தேன் எனப் பேசியுள்ளார்.இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.