சங்கரன்கோவிலில் காவல் துறை அதிகாரியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்...!

சங்கரன்கோவிலில் காவல் துறை அதிகாரியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்...!


சங்கரன்கோயில் அருகில் உள்ள சிவகிரியில் காவல் துறை டி.எஸ்.பி -யை எதிர்த்து  பொதுமக்கள்  திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  


சங்கரன்கோவில் அருகே சிவகிரியில் கடந்த ஏப்ரல் மூன்றாம் தேதி நடந்த ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவின் தேரோட்டத்தின் போது கலவரத்தை தூண்டும் வகையில்  தேரோடும் வீதியின் நடுவில் காவல்துறை வாகனத்தை நிறுத்திய சங்கரன்கோவில் டிஎஸ்பி சுதீரை
கண்டித்து  அப்பகுதி மக்கள் பெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

 இதையும் படிக்க;.. செங்கோட்டையில் சோதனை ரயில்... ! நூறாண்டு பாரம்பரியம்...!

மேலும் , தேரை இழுத்து வந்த 10க்கும் மேற்ப்பட்டவர்கள் மீது வழக்குபதிவு செய்து கைது செய்ததை கண்டித்தும் 3000க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. 

இதையும் படிக்க:... வேங்கை வயல் விவகாரம் காலம் தாழ்த்தினால் சமூக நீதி அரசுக்கு அழகல்ல - திருமா


 இதனை தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறை குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் அந்தப் பகுதியில் மிகவும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.