காதல் திருமணம்... 4 மாதங்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

திண்டிவனம் அருகே திருமணமாகி 4 மாதமான இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதல் திருமணம்... 4 மாதங்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

திண்டிவனம் அடுத்த எஸ் .கடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வினிதா, நர்சிங் டிப்ளமோ படித்துள்ள இவருக்கும், ஏப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த டாடா ஏசி டிரைவரான  கார்த்திகேயன் என்பவருக்கும் காதல் காதல் ஏற்ப்பட்டு  கடந்த 4 மாதத்திற்கு முன் இருவரும்  திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் இரு வீட்டாரும் ஏற்றுக் கொண்டதால், ஏப்பாக்கம் கிராமத்தில் கணவருடன் வசித்து வந்தார். இந்நிலையில் வினிதாவின் அம்மா லோகநாயகி கடந்த மூன்று மாதத்திற்கு முன் உடல்நிலை குறைவால் உயிரிழந்தார். இதனால் வினிதா மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இறந்த தாயாருக்கு தீபாவளி படையல் வைத்து வழிபட கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வினிதா தனது தாயார் வீட்டுக்கு  வந்துள்ளார். இதனிடையே நேற்று காலை வீட்டின் அருகே உள்ள தேக்கு மரத்தில் தன் துப்பட்டாவில் தூக்கிட்டு வினிதா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.’

இதுகுறித்து தகவலறிந்த  போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.