சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை...

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை...

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த பகுதி புதுச்சேரியில் இருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் 300 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 340 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு கடலூர் புதுச்சேரி காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால்  ரெட் அலர்ட்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் கள்ளக்குறிச்சி சேலம் பெரம்பலூர் அரியலுர் தர்மபுரி திருப்பத்தூர் வேலுர் ராணிபேட்டை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.  வடகடலோர மாவட்டங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும்  வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.