கிரிவல பாதையில் அசைவ உணவகங்கள்... ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை!!

கிரிவல பாதையில் அசைவ உணவகங்கள்... ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை!!

திருவண்ணாமலை கிரிவல பாதையில் அசைவ உணவகங்கள் இருப்பதை கண்டு வேதனை அடைந்ததாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 

2 நாள் பயணமாக ஆளுநர் ஆர்.என்.ரவி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சென்றுள்ளார். இதன் ஒருபகுதியாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தனது குடும்பத்தினருடன் அவர் சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை வழங்கப்பட்டது. 

இந்நிலையில், கிரிவல பாதையில் அசைவ உணவகங்கள் இருப்பதை கண்டு வேதனை அடைந்ததாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். உணவு என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் என்றாலும், பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார். 

மேலும், கிரிவல பாதையில் போதிய கழிவறை வசதிகள் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இதையும் படிக்க || நாங்குநேரி சம்பவம்: "நான்கு அண்ணன்கள் வந்து வெட்டிட்டு போய்ட்டாங்க"...நடந்தது என்ன?