ஊரக பகுதிகளின் தரத்தை மேம்படுத்த திட்டம்.. பல்வேறு பணிகளுக்காக நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு!!

தமிழ்நாட்டில் உள்ள ஊரக பகுதிகளின் தரத்தை மேம்படுத்த மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்காக 3 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஊரக பகுதிகளின் தரத்தை மேம்படுத்த திட்டம்.. பல்வேறு பணிகளுக்காக நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு!!

ஊரக பகுதிகளில் நிலத்தடி நீர் வளத்தை உயர்த்தவும், மேம்படுத்தவும் 683 கோடி ரூபாய் மதிப்பில் 10 ஆயிரம் தடுப்பணைகள் கட்ட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

விவசாயிகளின் வசதிக்காக ஆயிரத்து 346 கோடி ரூபாய் மதிப்பில் சுமார் 4 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை வசதிகளும், ஊரகப்பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடு செய்ய 350 கிலோ மீட்டர் தொலைவிற்கு வடிகால் வசதி அமைக்கவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும், ஊரகப்பகுதிகளை பசுமையாக்கவும், சூழலை பாதுகாக்கவும் 293 கோடி ரூபாய் மதிப்பில் 69 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் எனவும், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பயன்பெறும் வகையில் 59 கோடி ரூபாய் மதிப்பில் 500 அங்கன்வாடி மையங்களும் அமைக்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.