போக்குவரத்துக் காவலர் மீது தனியார் பேருந்து மோதி விபத்து.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்!!

ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

போக்குவரத்துக் காவலர் மீது தனியார் பேருந்து மோதி விபத்து.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் ராஜபாளையம் நகர் போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் வழக்கம்போல் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த  தனியார் பேருந்து போக்குவரத்து காவலர் சுரேஷின்  பின்னால் மோதியதில் தலைகுப்புற கவிழ்ந்து படுகாயமடைந்தனர்.  

பின்னர்  அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.