சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு!!

சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு!!

தமிழ்நாட்டில் உள்ள 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. 

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் பரனூர், வானகரம், செங்குன்றம் உள்ளிட்ட 29 சுங்க சாவடிகளில் 5 ரூபாய் முதல் 55 ரூபாய் வரை  கட்டணம் உயர்த்தப்பட்டது. 

இந்நிலையில் மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் விலை உயர்வு அமலுக்கு வருகிறது. 

அதன்படி ஒருமுறை கட்டணம் 5 ரூபாய் முதல் 45  ரூபாய் வரையிலும், இருமுறை கட்டணம் 10 ரூபாய் முதல் 65 ரூபாய் வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

இந்நிலையில், வாகன ஓட்டிகள் கட்டண உயர்வையொட்டி அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிக்க || அமெரிக்க அதிபராக துடிக்கும் இந்தியர்... யார் இந்த விவேக் ராமசாமி!!