லஞ்சம் வாங்குவதாக காவல் ஆய்வாளருக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்...!

லஞ்சம் வாங்குவதாக காவல் ஆய்வாளருக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்...!

சென்னை புது வண்ணாரப்பேட்டையில், புது வண்ணாரப்பேட்டை சட்ட ஒழுங்கு ஆய்வாளர்  வானமாமலை மற்றும் தலைமை காவலர் கருணா இருவரும்  கள்ளச்சந்தையில் போதை பொருட்கள் விற்பதற்கு  உடந்தையாக இருப்பதாக கூறி மக்கள் நல்வாழ்வு கட்சி சார்பில், அவர்களை கண்டித்து தெருமுனை பிரச்சாரக் கூட்டம் என்ற சுவரொட்டிகளை பல இடங்களில் ஒட்டியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இது தொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை ஆய்வாளர் வானமாமலையை  தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது, அந்த பகுதியில் அமைந்துள்ள இளைய முதலி தெருவில் சாலையோரத்தை ஆக்கிரமித்து ராமதாஸ் என்பவர் சிற்றுண்டி உணவகம் நடத்தி வந்துள்ளார். அதை அகற்ற பாதுகாப்புகோரி, மாநகராட்சி சார்பில் கடந்த ஜூன் மாதம் மாநகராட்சிகள் தங்களிடத்தில் பாதுகாப்பு கோரியதாகவும், அதற்கு தாம் தன் கடமையை செய்ததால் இவ்வாறு அவர் செயல் படுவதாகவும் கூறியுள்ளார். ஆய்வாளரை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.