இலவச வீட்டு மனை கேட்டு ஏழை பெண் விண்ணப்பம்.. லஞ்சம் கேட்ட அதிகாரி - ஆடியோ வெளியாகி பரபரப்பு!!

நெல்லையில் இலவச வீட்டு மனை கேட்டு விண்ணப்பித்த பெண்ணிடம் லஞ்சம் கேட்ட வட்டார வளர்ச்சி அலுவலரின் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலவச வீட்டு மனை கேட்டு ஏழை பெண் விண்ணப்பம்.. லஞ்சம் கேட்ட அதிகாரி - ஆடியோ வெளியாகி பரபரப்பு!!

ராஜகிருஷ்ணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராணி.  வாடகை வீட்டில் வசித்து வரும் இவர் இலவச வீட்டு மனை கேட்டு இணையதளத்தில் விண்ணப்பித்துள்ளார். ஆனால் மனை வழங்காமல் அதிகாரிகள் இழுத்தடித்ததால் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் செய்துள்ளார்.

இதன் அடிப்படையில் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலிருந்து முருகன் என்பவர், ராணியின் மகள் சிவரஞ்சனியை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது இலவச பட்டா வேண்டுமென்றால் வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும், இல்லாவிட்டால் எந்த ஒரு வேலையும்  நடக்காது என கூறிய ஆடியோ வெளியாகி  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக முருகன் என்பவர் மீது உனடியாக நடவடிக்கை எடுக்கும் வேண்டும் என ராணி மற்றும் அவரது மகள் சிவரஞ்சனி மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.