"பொங்கல் திருநாள் - தலைவர்கள் வாழ்த்து" - தமிழ்நாடு ஆளுநர் எனக்கூறி ஆர்என் ரவி வாழ்த்து..!

"பொங்கல் திருநாள் - தலைவர்கள் வாழ்த்து" - தமிழ்நாடு ஆளுநர் எனக்கூறி ஆர்என் ரவி வாழ்த்து..!

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை ஒட்டி ஆளுநர் ஆர்என் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள், மக்களுக்கு வாழ்த்துச் செய் தி வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு ஆளுநர் எனக்கூறி ஆர்என் ரவி வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு ஆளுநர் எனக்கூறி ஆர்.என். ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய் தியில், அறுவடைத் திருநாளில், சூரிய கடவுள் மற்றும் விருப்ப தெய்வங்களை வணங்கி பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டு மரியாதை செலுத்துவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய் தியில், தாய் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் இன்பம் பொங்கட்டும் எனவும், செங்கரும்பைப் போல் மக்கள் வாழ்வு தித் திக்கட்டும் என்று கூறி பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

திர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய் தியில்,  மக்கள் அனைவரது வாழ்விலும் அன்பும் அமை தியும் நிலவட்டும் என்றும்,  விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வில் வளத்தைக் கொண்டுவந்து சேர்க்கட்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

திர்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிடுகையில்,  உலககெங்கும் வாழும் தமிழர்கள் உள்ளப் பெருக்குடனும், உவகையுடனும், உற்சாகத்துடனும் மகிழ்ந்து கொண்டாடும் பொங்கல் திருநாளில் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

ம. தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்து செய் தியில் உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தமிழர் வாழ்வில் தைத் திருநாள், தமிழ் புத்தாண்டு தடைகளை தகர்த்து வழிகளை உருவாக்கட்டும் எனக்கூறி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பா.ம.க. தலைரவர் அன்பு மணி ராமதாஸ் வெளியிட்டுள்ள தனது வாழ்த்து செய் தியில், தைப்பொங்கல் திருநாளில் இயற்கையை காக்க தமிழர்களாக உறு தியேற்போம் என குறிப்பிட்டுள்ளார்.