கோயில்களை வைத்து அரசியல் செய்யக்கூடாது... அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்...

கோயில்களை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்றும், யார் அழுத்தம் கொடுத்தும் கோவில்கள் திறக்கப்படவில்லை, மக்கள் கோரிக்கைக்கு ஏற்பவே திறக்கப்பட்டதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

கோயில்களை வைத்து அரசியல் செய்யக்கூடாது... அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்...

சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு சாமி தரிசனம் செய்தார். மேலும் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் தொடர்பாக ஆய்வு நடத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைத்து நாட்களிலும் கோயில்கள் திறக்கப்படும் என அறிவித்த முதலமைச்சருக்கு மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள் என்றும், கோயில்களில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் கூற்றினார்.

மேலும் கோயில்களில் பொதுமக்கள் கூட்டமின்றி சுவாமி தரிசனம் செய்து வருவதாக கூறிய அமைச்சர், சூழ்நிலைக்கேற் சாமிக்கு ஆரத்தி காட்டுவது, பிரசாதம் வழங்குவது குறித்து கோயில் நிர்வாகங்கள் முடிவெடுக்க அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

அதேபோல் கோயில்களில் குடமுழக்கு நடத்துவது குறித்து ஏற்கனவே முதலமைச்சர் ஆய்வு நடத்தி உள்ளார் என்றும், விரைவில் இதுதொடர்பாக முதல்வர் வெகு விரைவி நல்ல முடிவு அறிவிப்பார் என்றார். 

கோவில்கள் திறக்க பாஜக கொடுத்த அழுத்தம் தான் காரணம் என அக்கட்சி கூறுவது குறித்த கேள்விக்கு, கட்டுப்பாடு இல்லாத ஆட்சிக்குதான் அழுத்தம் தேவைப்படும்; ஆய்வு கூட்டம் நடத்திய பிறகே கோயில்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர், அழுத்ததிற்கு அடிபணியும் ஆட்சி கிடையாது என்றும், மக்களுக்கு அழுத்தம் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இது பாஜகவிற்கு கிடைத்த வெற்றி என்று அவர்கள் கூறுவதற்கு பதில் அளித்த அமைச்சர், கோயில்களை வைத்து அரசியல் செய்யக்கூடாது; மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப கோயில்கள் திறக்கப்பட்டுள்ளது என்றும், கனிந்த கனியை தடியால் அடித்து விழ வைப்பது போல் இருக்கிறது அவர்கள் கூறுவது என்று கூறினார்.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இயங்கும் கல்வி நிறுவனங்களில், கோயில் வருவாயில் செல்லும் சம்பளம் இந்துக்களாக இருக்க வேண்டும் என்ற சட்டம் உள்ளதால் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இயங்கும் கல்லூரிகளில் இந்துக்கள் மட்டும் பணிக்கு நியமிக்கப்படுகிறார்கள் என தெரிவித்தார்.

இந்நிலையில் கே.பி.பார்க் கட்டடம் உறுதியாக உள்ளது என்றும் பூச்சு வேலையில்தான் தவறி நடந்துள்ளது என ஆய்வறிக்கையில் வந்துள்ளது. எனவே ஆய்வறிக்கையில் விடுபட்ட பணிகளும் அமைச்சரின் கவனத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.