கருணாநிதியின் இல்லத்திற்கு சென்ற முதலமைச்சருக்கு காவல்துறையினர் பேரணி மரியாதை...!

கருணாநிதியின் இல்லத்திற்கு சென்ற முதலமைச்சருக்கு காவல்துறையினர் பேரணி மரியாதை...!

திருவாரூரில் கலைஞர் கருணாநிதியின் இல்லத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை வழங்கினர். 

”கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், ஆய்வுகள் மேற்கொள்ள திருச்சி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு அலுவலகங்களில் ஆய்வு நடத்தினார். தொடர்ந்து மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். இதற்கிடையில் தஞ்சாவூர் கல்லுகுளத்தில் உயிரிழந்த முன்னாள் அமைச்சர் உபயதுல்லாவின் உருவப் படத்திற்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார். 

இதையும் படிக்க : ஆசிரமத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை...CBCID விசாரணை தொடக்கம்...!

பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக திருவாரூர் மாவட்டத்திற்கு வந்தடைந்த முதலமைச்சருக்கு,  திமுகவினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர்,  திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள கலைஞர் கருணாநிதியின் இல்லத்திற்கு முதலமைச்சர் வருகை தந்தார். அப்போது, காவல்துறையினர் அளித்த அணிவகுப்பு மரியாதையை மு.க.ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார். 

முன்னாதாக, காரில் இருந்து இறங்கிய முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.