முதல் நாளே பஸ்-டே  கொண்டாட்டமா..? பேனருடன் வந்த மாணவர்களை அள்ளிய போலீஸ்...

பஸ்-டே" கொண்டாட பேனருடன் வந்த 8 மாணவர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல் நாளே பஸ்-டே  கொண்டாட்டமா..? பேனருடன் வந்த மாணவர்களை அள்ளிய போலீஸ்...

கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் "பஸ்-டே" கொண்டாட்டத்தை தடுக்கும் வகையில் சென்னை காவல்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது. 

இந்நிலையில் பெரம்பூர் பேருந்து நிலையம் அருகில் கல்லூரி மாணவர்கள்  "பஸ்-டே" கொண்டாட  கையில் பேனர் வைத்திருந்தனர். தகவல் அறிந்த செம்பியம் போலீசார் உடனே சென்று அங்கிருந்த 8 மாணவர்களையும் பிடித்தனர். பின்னர் அவர்கள் வைத்திருந்த பேனரைப் பறிமுதல் செய்தனர் போலீசார்.  

பெரம்பூரில் இருந்து திருவேற்காடு நோக்கி செல்லும் 29E பேருந்தில் செல்லத் தயாராக இருந்த அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் 8 மாணவர்களும் கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் என தெரிய வந்ததால் அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.