சப்ஜெட்டுக்கு உயிர் வந்தமாதிரி தமிழ்நாடு அரசுடன் கைகோர்க்கும் மக்கள் நீதி மய்யம்
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தொடரும் உயிர் பலிகள்!’’ ஆன்லைன் சூதாட்ட அவசர தடை சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்காத ஆளுநருக்கு மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம்
ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் மூலம் கோடிக்கணக்கில் கிடைக்கும் வரி வருவாய்க்காகவும், இதர வருவாய்க்காகவும் அதனை தடை செய்ய மத்திய பாஜக அரசு மறுத்து வருகிறது. ஆன்லைன் ரம்மிக் கு தமிழக அரசு இயற்றிய அவசர தடை சட்டத்திற்கு அனுமதி தராமல் மத்திய அரசின் கைப்பாவையாக ஆளுநர் ஆர்.என் .ரவி அவர்கள் செயல்பட் டு வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இந்த நிலை யில் இளைஞர்கள், இல்லத்த ரசிகள் மட் டுமின் றி அரசு ஊழியர்கள் தொடங் கி தினக் கூலி தொழிலாளர்கள் வரை அவர்களின் மனதில் பணத்தாசையை தூண்டிவிட்டு, கடைசியில் அவர்களை கடனாளியாக்கி உயிரைக் குடிக்கும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன் கோவை , உப்பிலிபாளையத்திலும், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரிலும் என இரண்டு இளைஞர்களின் உயிர் பலி கொடுக்கப்பட்டிருப்ப து மிகுந்த வே தனையளிப்பதாக இருக்கிறது.
29வயது மென்பொறியாளரான சங்கர் மற்றும் 21 வயதான வினோத் குமார் என் கிற மென்பொறியியல் மாணவரும் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்ச க்கணக் கில் பணத்தை இழந்து கடனாளியாகியதால் வ று வழியின்றி தங்களது உயிரை மாய்த்துக் கொண்டிருப்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது.
மேலும் படிக்க | எங்க ஏரியா உள்ளவாரதே
இளம் மென்பொறியாளரான சங்கர் மற்றும் பொறியியல் மாணவர் வினோத் குமார் ஆகியோர் மட் டுமின்றி எண்ணற்ற இளைஞர்கள், இல்லத்தரசிகள், தொழிலாளரகள், அரசு ஊழியரகளின் உயிரைப் பறித்துக் கொண்டிருக் கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் வகையில் மாநில அரசு அவசர தடை சட்டம் நிறைவே ற்றி அதனை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி இரண்டு மாதங்கள் கட ந்த நிலை யிலும் கூட அந்த அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கா த ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களே இரு இளைஞர்களின் துர் மரணத்திற்கும் பொறுபேற்க வேண்டும்.
அத்துடன் மாநில அரசுக் கு எதிரான நிலையை கடைபிடித்து, மக்கள் விரோத செயலை கடைபிடித்து, மத்திய அரசின் கைப்பவையாக தொடர்ந்து செயல்பட் டு வரும் ஆளுநர் அவர்கள் தன் போக்கினை மாற்றிக் கொண்டு தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு தாமதமின்றி உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.
மேலும் படிக்க | உறுதி செய்யப்பட்டதா ”ஒரு பதவி ஒரு ஓய்வூதியம்”...உச்சநீதிமன்றம் கூறுவதென்ன?
மக்கள் நலனுக்கான பொறுப்பில் இருந் து கொண்டு அதனை தட்டிக் கழித்து கொண்டிருப்பதும், சட்டமன்றத்தில் இயற்றப்பட்டும் மாநில அரசின் தீர்மானங்களை பரிசீலிக்காமலேயே கிடப்பில் போட்டுவைத்திருப்பதும் 7.5 கோடி தமிழர்களுக்கு செய்கின்ற துரோகமாகும் என்பதை யும் கவனத்தில் கொண்டு ஆளுநர் அவர்கள் செயல்பட வேண்டும் என மக்கல் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி சார்பில் வலியுறுத்துகிறோம்.