எங்க ஏரியா உள்ளவாரதே

குப்பை கொட்ட கிராம மக்கள் எதிர்ப்பு 5 டிராக்டர்களை சிறை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது

எங்க  ஏரியா  உள்ளவாரதே

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் வெங்கத்தூர் முதல்நிலை ஊராட்சிக்குட்பட்ட வெங்கத்தூர், கபிலர் நகர், பட்டறை, எம்.ஜி.ஆர் நகர், ஒண்டிக்குப்பம் போன்ற சுற்றுப்பகுதிகளில் சேரும் குப்பைகளை ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் வாகனங்களில் கொண்டு வந்து அதனை மணவாளநகர் கணேசபுரம் பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் கொட்டி வந்தனர்.
இந்த நிலையில் நீர் நிலைகளில் குப்பைகளை கொட்ட கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து மேற்கண்ட இடத்தில் குப்பைகளை கொட்ட அனுமதி மறுக்கப்பட்டது. 

மேலும்படிக்க | மக்களவை நிறைவேறிய மசோதா: வரவேற்று ட்வீட் செய்த முதலமைச்சர்

அதை தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் சார்பில்  வெங்கத்தூர் ஊராட்சி கன்னிமா நகர் பகுதியில் பள்ளி, அங்கன்வாடி மற்றும் குடியிருப்பு அருகில் குப்பைகள் கொட்டப்பட்டது. 
தினந்தோறும் 2டன்  குப்பைகள் கொட்டப்படுவதால்  அப்பகுதியில் குப்பைகள் மலைபோல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அப்பகுதியை  சேர்ந்த பொதுமக்களுக்கு  தோல் நோய் உட்பட பல வகையான நோய்களால் பாதிக்கப்பட்டுவதாக கூறப்படுகிறது 
இதனால் இன்று இரண்டாவது முறையாக 5க்கும் மேற்பட்ட டிராக்டர்களில்  குப்பைகளை ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் கன்னிமாநகர் பகுதியில் கொட்ட வந்தனர்.

   மேலும் படிக்க |  திமுகவை போல பா.ஜ.க.வில் தலைமை பொறுப்புக்கு ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் வருவது கிடையாது - வானதி சீனிவாசன் பேட்டி
இதை கண்ட அப்பகுதியை சேர்ந்த பெண்கள் என 50க்கும் மேற்பட்டவர்கள் குப்பை வாகனங்களை சிறையில் பிடித்து தங்கள் பகுதியில் கொட்ட கூடாது என எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுப்பற்றி தகவல் அறிந்தத வெங்கத்தூர் முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர் சுனிதா பாலயோகி,  வெங்கத்தூர் வருவாய் ஆய்வாளர் விஷ்ணு பிரியா, கிராம நிர்வாக அலுவலர் ஜெயந்தி மற்றும் மணவாளநகர் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் .
இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.