பிறந்து 20 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை... தெருவில் வீசி சென்ற மர்ம நபர்கள்...

வேடசந்தூர் அருகே பிறந்து 20 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை தெருவில் வீசி சென்ற மர்ம நபர் குழந்தையை காவல் துறையினர் மீட்டனர்.

பிறந்து 20 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை... தெருவில் வீசி சென்ற மர்ம நபர்கள்...

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வடமதுரை ரயில்வே சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே தெருவோரம் இன்று மாலை குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. ருகிலிருந்தவர்கள் குழந்தை அழும் சத்தம் கேட்டவுடன் ஓடிச்சென்று பார்த்துள்ளனர்.

அங்கு தெரு ஓரத்தில் பிறந்து 20 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று அழுது கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் குழந்தையை மீட்டு அதற்கு ஆடை ஒன்று அணிவித்தனர் அதன் பின்னர் வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடமதுரை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர் அதில் குழந்தை பிறந்து 20 நாட்களே ஆனது என்றும் குழந்தை ஆண் குழந்தை என்பதும் தெரியவந்தது கல் நெஞ்சம் படைத்த யாரோ குழந்தையை தெருவோரம் விட்டு சென்றதும் தெரியவந்தது.

பின்பு போலீசார் குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்சில் ஏற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு திண்டுக்கல் அருகே சின்னாளபட்டியில் உள்ள  குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிறந்து 20 நாட்களே ஆன நிலையில் குழந்தையை தெருவோரம் வீசிச் சென்ற மர்ம நபர் யார் என்பது குறித்து வடமதுரை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.